கிரிக்கெட்டில் வர்ணனையாளர் பயிற்றுவிப்பாளர் ஆன அதிசயம்


 

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்கு வர்ணனையாளராக தெரிவான தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் கெர்சல் கிப்ஸ், அந்த தொடரில் பங்குபெறும் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பொறுப்பினை ஏற்கிறார்.

கொழும்பு கிங்ஸ் அணியின் முன்னைய பயிற்றுவிப்பாளர் டேவ் வட்மோர் விலகலை தொடர்ந்து இங்கிலாந்து வீரர் கபீர் அலி புதிய பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அண்மைய கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்துக்கே கெர்சல் கிப்ஸ் நியமனம் ஆகியிருக்கிறார். கிப்ஸின் உதவி பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் செயற்பட இருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post