கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரை தங்குதடையின்றி நடாத்தி 2021ம் ஆண்டில் இறுதிப்போட்டியை நடத்துவதற்காக ஐசிசி புதிய புள்ளி கணிப்பிடும் முறையை அறிவித்திருக்கிறது.
இந்த முறையின் அடிப்படையில், இதுவரை தரப்படுத்திலிருந்த இந்திய அணியை பின்தள்ளி அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. புதிய புள்ளி முறையானது, அணிகள் விளையாடிய தொடர்களுக்கான மொத்த புள்ளிகளுக்கும், பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கிடையிலான விகிதாசாரமாக கணிப்பிடப்படுகிறது.
உதாரணமாக, அவுஸ்திரேலிய அணி தான் விளையாடிய மூன்று தொடர்களில் மொத்தமாக பெறக்கூடிய புள்ளிகள் 360 (3*120). அவர்கள் பெற்ற வெற்றி மற்றும் சமநிலை முடிவுகளின் பிரகாரம் பெற்றுக்கொண்ட புள்ளிகள் 296. இதன் அடிப்படையில் மொத்த புள்ளிக்கும், பெற்றுக்கொண்ட புள்ளிக்குமான விகிதாசாரம் 82.2% மாகும்.
Post a Comment