போட்டி முடிந்து மைதானத்தில் இருந்தபடியே சோனி தொலைக்காட்சி வர்ணனையாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரான முரளி கார்த்திக் (தமிழக வீரர்) நடராஜனை வீடியோ கான்பரன்சிங் மூலம் பேட்டி எடுத்தார். அப்போது இந்திய அணிக்கு நீங்கள் தேர்வானது குறித்தும் உங்களது மனநிலை குறித்தும் எங்களுக்கு தெளிவாக கூறுங்கள் என்று முரளி கார்த்திக் தமிழில் கேட்டுக்கொண்டார். பிறகு பேசிய நடராஜன் : ஆம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்திய நாட்டிற்காக முதல் சீரியஸில் வெற்றியுடன் இங்கு நிற்கிறேன். இந்த தருணத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நான் சந்தோஷத்தில் இருக்கிறேன்.
அதுமட்டுமின்றி நெட் பவுலராக இங்கு வந்தேன். ஆனால் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று என்னுடைய ஒட்டு மொத்த திறமையையும் இந்த தொடரில் வெளிப்படுத்தினேன். அதுமட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் அணி நிர்வாகத்தினர் எனக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அணி வீரர்கள் அனைவருமே எனக்கு ஊக்கம் அளித்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கமும், நிர்வாகத்தின் நம்பிக்கையும், ரசிகர்களின் ஆதரவும் என்னுடைய இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு காரணம்.
மேலும் ஐபிஎல் தொடரில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தேன். அந்த பார்மை இந்த தொடரிலும் காண்பிப்பதற்காகவே அதை உணர்ந்தே பந்துவீசினேன். இந்த தொடர் முழுவதும் எனக்கு சிறப்பாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது உள்ள என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தை இல்லை என்று முரளி கார்த்திக்குக்கு நடராஜன் தமிழில் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.
From being a net bowler to impressing the whole nation in his debut series, @Natarajan_91 has surely come a far way 🙌🏽
— Sony Sports (@SonySportsIndia) December 8, 2020
Watch him talk to @kartikmurali about his journey and game plan 🎙️#CricketKaAsliRang #AUSvIND #INDvAUS #SonySports #TNatarajan #Natarajan pic.twitter.com/Cgo2Mv4NHw
Post a Comment